பெண் அதிகாரிக்கு கொலை மிரட்டல்: உயர் அதிகாரி மீது வழக்கு.

by Staff / 13-10-2023 02:19:37pm
பெண் அதிகாரிக்கு கொலை மிரட்டல்: உயர் அதிகாரி மீது வழக்கு.

சென்னை: குடிநீர் வாரிய பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை மற்றும் கொலை மிரட்டல் விடுத்த உயர் அதிகாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.சென்னை ராயபுரத்தில் உள்ள குடிநீர் வாரிய அலுவலகத்தில் பணிபுரிந்த பெண் அதிகாரிக்கு, உயர் அதிகாரி பாலியல் தொல்லை கொடுத்தால், மனமுடைந்த அவர், தற்கொலைக்கு முயன்றார்.தற்போது மருத்துவமனை சிகிச்சை பெற்று நலமுடன் உள்ள அவரை, தொடர்பு கொண்ட, அதிகாரியின் மனைவி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via