திருவண்ணாமலை விபத்து - நிவாரண நிதி முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

by Staff / 15-10-2023 01:40:30pm
திருவண்ணாமலை விபத்து - நிவாரண நிதி முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

திருவண்ணாமலை செங்கம் அருகே நடந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காரும், லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் 7 பேர் உயிரிழந்தை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். விபத்தில் படுகாயம் அடைந்த பெண்ணுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன் என தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் 2 சிறுவர்கள், 4 ஆண்கள், ஒரு பெண் உயிரிழந்துள்ளனர். காரில் பெங்களூர் நோக்கி சென்றபோது இந்த விபத்து நடந்துள்ளது.

 

Tags :

Share via