கனமழை எச்சரிக்கை காரணமாக திண்டுக்கல், கரூர் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கனமழை எச்சரிக்கை காரணமாக இன்று திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். தொடர் மழையின் காரணமாக விடுமுறை அறிவித்து ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (திங்கள்கிழமை) திண்டுக்கல், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. நாமக்கல், கரூர், திருவண்ணாமலை, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
Tags : கனமழை எச்சரிக்கை