"பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது ” திருமாவளவன் எம்.பி

by Editor / 22-10-2023 07:50:59am

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக, 2024 நாடாளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு  வடக்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சிப் பட்டறை   சென்னை, நந்தனம், ஓய்.எம்.சி.ஏ திடலில் நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார். மேலும், இதில் கூட்டணி கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில்  விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு பேசியதாவது:இந்தியக் கூட்டணியின் வெற்றிக்கு விசிக முழுமையாக உழைப்போம். திருமாவளவன் வெற்றி பெற்று விட்டால் போதும் என்று இருக்கக் கூடாது 40 தொகுதியிலும் நமது கூட்டணிக் கட்சிகளை வெற்றி பெறுவதற்கு உழைக்க வேண்டும் அதற்குத் தான் இந்த கூட்டம் . மீண்டும் பாஜக ஆட்சிக்கு வர கூடாது அதுவே நமது ( விசிக) வின் சபதம்.

இந்தியாவை இந்துக்களின் நாடு என்று பிரகடனப்படுத்த வேண்டும் அதுவே பாஜகவின் நோக்கம். ஆனால் அதற்கு தடைக்கல்லாக இருப்பது அம்பேத்கரின் அரசியல் அமைப்பு சட்டம் தான். கம்யூனிஸ்ட், காங்கிரஸ்,திமுக என அனைத்து கட்சிகளின் குரலும் அம்பேத்கரின் குரலாக இருக்கிறது; மொழிகள் மாறினாலும் கருத்து ஒன்று தான்

நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய கூட்டணியின் வெற்றிக்கு முழுமையாக உழைக்க வேண்டும். 40 தொகுதியிலும் நமது கூட்டணி கட்சிகளை வெற்றி பெற வைக்க வேண்டும். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது அதுவே விசிக-வின் சபதம் என விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி பேசினார்.

 

Tags : "பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது ” திருமாவளவன் எம்.பி

Share via