நேரடி நெல் கொள்முதலை ஏன் நிறுத்தினீங்க அன்புமணி

by Staff / 01-11-2023 12:28:49pm
நேரடி நெல் கொள்முதலை ஏன் நிறுத்தினீங்க அன்புமணி

காவிரி பாசன மாவட்டங்களில் நேரடி நெல் கொள்முதலை எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் அதிகாரிகள் நிறுத்தியது ஏன் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். அதன்படி, காவிரி பாசன மாவட்டங்களில் நேரடி நெல் கொள்முதல் திடீரென நிறுத்தப்பட்டதால், அறுவடை செய்யப்பட்ட நெல்லை விற்பனை செய்ய முடியாமல் உழவர்கள் தவித்து வருகின்றனர் என தெரிவித்துள்ளார். மேலும், அடுத்த சில நாட்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து விடும் என்பதால், அதற்குள்ளாக அறுவடையை முடித்து, நெல்லை விற்பனை செய்யும் வகையில், நேரடி கொள்முதலை உடனடியாக தொடங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

 

Tags :

Share via