திமுகவினர் 12 பேர் இரவோடு இரவாக கைது
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கல்குவாரி ஏலத்தின் போது, வன்முறையில் ஈடுபட்ட திமுகவை சேர்ந்த 12 பேர் இரவோடு இரவாக கைது செய்யப்பட்டுள்ளனர். பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் கல்குவாரி ஏலம் தொடர்பான விண்ணப்பங்கள் பெறப்பட்டபோது, அமைச்சர் சிவசங்கர் உதவியாளர் மகேந்திரன் உள்ளிட்டோர் அடிதடியில் ஈடுபட்டனர். இது தொடர்பாக இபிஎஸ் நேற்று புகாரளித்துள்ளார். இந்நிலையில், அடிதடியில் ஈடுபட்ட திமுகவை சேர்ந்த அன்புச்செல்வன், கருணாநிதி, குடியரசன், சிவக்குமார் உட்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் இரவோடு இரவாக கைது செய்துள்ளனர்.
Tags :