ஆற்றில் கவிழ்ந்த படகு.. இருவர் பலி

by Staff / 02-11-2023 12:40:50pm
ஆற்றில் கவிழ்ந்த படகு.. இருவர் பலி

பீகார் மாநிலத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் இருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் சரயு ஆற்றில் இந்த படகு விபத்துக்குள்ளானது. படகு கவிழ்ந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாட்டியார் காட் பகுதியில் இருந்து 19 பயணிகளுடன் பயணித்த போது இந்த விபத்து நடந்துள்ளது. 10 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் மீட்புப் படையினர் தகவல் தெரிவித்தனர்.

 

Tags :

Share via