ஆர்எஸ்எஸ் பேரணி - வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

by Staff / 03-11-2023 02:47:11pm
ஆர்எஸ்எஸ் பேரணி - வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் பேரணி நடத்த அனுமதி கோரிய நிலையில், தமிழ்நாடு போலீசார் அனுமதி மறுத்தனர். இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த உத்தரவிட்டிருந்த நிலையில், இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், தனி நீதிபதி உத்தரவை எதிர்ப்பதாக இருந்தால், டிவிஷன் பெஞ்சில் முறையிடலாம், எதற்காக இங்கு வந்தீர்கள் என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

 

Tags :

Share via