உலக தரத்தில் ரயில் நிலையங்கள் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
இந்தியாவில் விரைவில் உலக தரத்திலான ரயில் நிலையங்கள், தண்டவாளங்கள் அமைக்கப்படவுள்ளதாக ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், உட்கட்டமைப்பு பணிகளில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. இதன்மூலம் பொருளாதார வளர்ச்சியை எதிர்நோக்கி இருக்கிறோம். ஆண்டுதோறும் 4500 கி.மீ புதிய தண்டவாளங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. 1275 ரயில் நிலையங்களை மேம்படுத்துவதற்கான பணிகள் தொடங்கி விட்டது என கூறினார்.
Tags :