மாரடைப்பால் 9ம் வகுப்பு மாணவி பள்ளியிலேயே மரணம்

by Staff / 05-11-2023 05:12:59pm
மாரடைப்பால் 9ம் வகுப்பு மாணவி பள்ளியிலேயே மரணம்

குஜராத்தின் அம்ரேலி நகரில் 9ம் வகுப்பு பள்ளி மாணவி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவி சாஷி ரஜோசரா (வயது 15) நேற்று நவம்பர் 4 ஆம் தேதி தேர்வு அறைக்குள் நுழையும்போது மயங்கி கீழே விழுந்தார். உடனே அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றப்போது, ஏற்கெனவே, மாணவி மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். சமீபகாலமாக, இளம் வயதினர் மாரடைப்பால் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது.

 

Tags :

Share via