பென்ஷன்தாரர்களே.. அஞ்சல்துறை அறிவிப்பு

by Staff / 08-11-2023 12:54:22pm
பென்ஷன்தாரர்களே.. அஞ்சல்துறை அறிவிப்பு

மத்திய, மாநில அரசின் ஓய்வூதியதாரர்களுக்கு அஞ்சல்துறையின் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. மத்திய, மாநில அரசின் ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதியம் பெறுவதற்கு ஆண்டுதோறும் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இந்த சான்றிதழை அஞ்சலகம், இ-சேவை மையத்தில் எளிதாக பெறலாம். மேலும், நேரில் வரமுடியாதவர்களுக்கு அஞ்சல்துறை வீட்டிற்கு நேரில் சென்று இந்த சான்றிதழை வழங்கி வந்துள்ளது. தற்போது, தபால்காரரிடம் ரூ. 70 செலுத்தி வீட்டில் இருந்தபடியே கைரேகை மூலமாக இந்த சான்றிதழை சமர்ப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அஞ்சல்துறை அறிவித்துள்ளது.

 

Tags :

Share via