என்ஐஏ அதிகாரிகள் சோதனை

by Staff / 08-11-2023 12:58:40pm
என்ஐஏ அதிகாரிகள் சோதனை

தமிழகத்தில் சென்னை, திருப்பூர், புதுச்சேரியில் இன்று என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனையில் 3 பேர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வங்கதேசம், மியான்மர் நாடுகளில் இருந்து இளைஞர்களை பணம் கொடுத்து விலைக்கு வாங்கி, . வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் போன்று, ஆதார், ரேஷன் கார்டு உள்ளிட்ட அடையாள அட்டையை உருவாக்கி தமிழகத்தில் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, திருப்பூரிலுள்ள தொழிற்சாலைகளுக்கு வெளிமாநிலங்களில் இருந்து ஆட்களை அழைத்து வரும் முகவர்களின் வீடுகளில் என்ஐஏ சோதனை நடைபெற்று வருகிறது.

 

Tags :

Share via