செந்தில் பாலாஜிக்கு மருத்துவ பரிசோதனை

by Staff / 15-11-2023 05:25:24pm
செந்தில் பாலாஜிக்கு மருத்துவ பரிசோதனை

புழல் சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து வரவுள்ளனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மருத்துவமனைக்கு அழைத்து வரப்படும் அவர், பரிசோதனை முடிந்தவுடன் மீண்டும் சிறைக்கு கொண்டு செல்லப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஜுன் 14ஆம் தேதி செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து, உடல்நலக்குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் பைபாஸ் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. இதனிடையே அவருக்கு தொடர்ந்து 10வது முறையாக ஜாமீன் மறுக்கப்பட்டு வரும் நிலையில், வரும் 22ஆம் தேதி வரை காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.

 

Tags :

Share via