பாக்கெட் மதுபானம் குறித்து ஆய்வு செய்ய குழு

by Staff / 15-11-2023 05:30:57pm
பாக்கெட் மதுபானம் குறித்து ஆய்வு செய்ய குழு

டெட்ரா பாக்கெட் வடிவில் மதுபானங்கள் கூடிய விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. டெட்ரா பேக்கில் மதுபானத்தை அடைத்து விற்பனை செய்தால் உடல்நலக்குறைவு ஏற்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையில், டெட்ரா பாக்கெட்டுகளில் மதுபானம் விற்பதால் ஏற்படும் நன்மை, தீமைகளை ஆய்வுசெய்ய நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

 

Tags :

Share via