சாலை விபத்தில் தந்தை, மகள் சம்பவ இடத்திலேயே பலி
தஞ்சையில் லாரியும், பைக்கும் மோதிய கோர விபத்தில் தந்தை, மகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். முன்னே சென்ற டாரஸ் லாரியை முந்த முயன்றபோது, எதிரே வந்த பைக் மீது மோதி கீழே விழுந்தனர். இதில் பின்னால் வந்த டாரஸ் லாரி ஏறி இறங்கியதில் தந்தை, 4 வயது மகள், உயிரிழந்த நிலையில், தாய், 6 மாத பெண் குழந்தை படுகாயத்துடன் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :