சுரங்கபாதையில் சிக்கிய தொழிலாளர்கள் இன்று மீட்பு

by Staff / 23-11-2023 11:32:03am
சுரங்கபாதையில் சிக்கிய தொழிலாளர்கள் இன்று மீட்பு

உத்தரகாசி சுரங்கபாதை விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை இன்று (நவம்பர் 23) மீட்டு விடுவோம் என்று சுரங்கபாதை திட்ட தலைவர் ஹர்பால் சிங் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் சுரங்கப்பாதை மீட்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால், சுரங்கப்பாதைக்கு வெளியே ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. மீட்புப் பணிகளை விரைவுபடுத்துவதற்காக டெல்லியில் இருந்து 7 நிபுணர்கள் கொண்ட குழு நிகழ்விடத்தில் உள்ளது என தெரிவித்தார்.

 

Tags :

Share via