பெண்களிடம் விவரம் கேட்பு - இபிஎஸ் கண்டனம்
கட்டணமில்லா அரசு பேருந்தில் பெண் பயணிகளிடம் தேவையற்ற விவரங்களை அரசு கேகரிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பெண் பயணிகளிடம் பெயர், வயது, மொபைல் எண், சாதி போன்ற 15 விவரங்களை நடத்துநர்கள் விசாரித்து, போக்குவரத்துத் துறை வழங்கியுள்ள படிவங்களில் பூர்த்தி செய்ய திமுக அரசு உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. போக்குவரத்துத் துறையின் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு கடும் கண்டனம்; புள்ளி விவரங்களை சேகரிக்கும் பணிக்கு உடனடியாக முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Tags :