மிக்ஜாம் புயல் சென்னையில் இருந்து 210 கி.மீ. தொலைவில் நிலை கொண்டது.

by Editor / 04-12-2023 08:46:41am
மிக்ஜாம் புயல் சென்னையில் இருந்து 210 கி.மீ. தொலைவில் நிலை கொண்டது.

மிக்ஜாம் புயல் சென்னையில் இருந்து 210 கி.மீ. தொலைவில் நிலை கொண்டது. மணிக்கு எட்டு கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து இப்புயல் ஆந்திராவின் நெல்லூர்- மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்க உள்ளது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டில் கனமழை கொட்டித்தீர்க்கிறது. சென்னையில் 150 முதல் 160 கி.மீ. வரை புயல் நெருங்கிய நிலையில் தற்போது 130 கி.மீ. வரை சென்றுள்ளது. வடக்கு வட மேற்கு திசையில் தற்பொழுது புயல் நகர்ந்து வருகிறது. டிசம்பர் 5ஆம் தேதி முற்பகல் கரையை கடக்கும். இதனால் அதிகபட்சமாக 90-100 கி.மீ. வேகத்தில் 110 வரை காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags : மிக்ஜாம் புயல் சென்னையில் இருந்து 210 கி.மீ. தொலைவில் நிலை கொண்டது.

Share via