ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக 101 ஏரிகள் நிரம்பியது.

by Editor / 05-12-2023 08:41:50am
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக 101 ஏரிகள் நிரம்பியது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக பெய்து வரும் பருவ மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள ஏரிகள் அதிவேகமாக நிரம்பி வருகிறது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 369 ஏரிகளில்  101 ஏரிகள் 100% முழுமையாக அதன் முழு கொள்ளளவை எட்டி உள்ளதாகவும்,6 ஏரிகள் 75% முதல் 99% வரை நிரம்பியுள்ளதாகவும்,22 ஏரிகள் 50% முதல் 75% வரை நிரம்பியுள்ளதாகவும்.

104 ஏரிகள் 50% வரை நிரம்பியுள்ளதாகவும் மீதமுள்ள 108 ஏரிகள் அதன் முழு கொள்ளளவில் 25 சதவீதத்திற்கும் குறைவாக நிறைந்துள்ளதாக பொதுப்பணித்துறை சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

 

Tags : ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக 101 ஏரிகள் நிரம்பியது.

Share via