20 நிமிடம் தாமதத்தோடு புறப்பட்ட பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில்.

by Editor / 06-12-2023 09:44:05pm
20 நிமிடம் தாமதத்தோடு புறப்பட்ட பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில்.

சென்னையில் புயலின் தாக்கம் காரணமாக நான்காம் தேதி ரத்து செய்யப்பட்ட பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் இன்று சென்னைக்கு புறப்பட்டது. இந்த ரயில் பராமரிப்பு பணிகளுக்காக திருநெல்வேலி ரயில் சர்வீஸ் சென்டருக்கு அனுப்பப்பட்ட தன் தொடர்ச்சியாக செங்கோட்டை ரயில் நிலையத்திற்கு தாமதத்துடன் வந்ததால் செங்கோட்டையில் இருந்து இந்த ரயில் 20 நிமிட தாமதத்துடன் சென்னைக்கு 6:20 மணிக்கு புறப்பட்டு செல்லக்கூடிய புதிய எக்ஸ்பிரஸ் ரயில் 6.42 மணியளவில் புறப்பட்டு சென்றது. மேலும் இந்த ரயிலில் 840 பயணிகள் முன்பதிவு செய்து இருப்பதாகவும் ரயில் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் செங்கோட்டையில் இருந்து புறப்பட்ட பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏராளமான பெட்டிகள் காலியாகவே கிடந்தன மேலும் முன்பதிவு இல்லாத பெட்டிகளும் கூட்டம் இல்லாமல் குறைந்த அளவு பயணிகளோடு இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Tags : தாமதத்தோடு புறப்பட்ட பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில்.

Share via