இளம் மருத்துவர் தற்கொலை

by Staff / 07-12-2023 12:20:56pm
இளம் மருத்துவர் தற்கொலை

கேரள மாநிலத்தில் வருங்கால கணவரின் குடும்பத்தினர் அதிக வரதட்சணை கேட்டதால் இளம் மருத்துவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் சஹானா (26) என்பவருக்கு தனது நண்பருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் மணமகனின் குடும்பத்தினர் அதிக வரதட்சணை கேட்டுள்ளனர். அதிக வரதட்சணை கொடுக்க முடியாது என சஹானா குடும்பத்தினர் கூறியதால் திருமணம் ரத்து செய்யப்பட்டது. இதனால் மனமுடைந்த சஹானா தற்கொலை செய்து கொண்டார்.

 

Tags :

Share via