மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் : ராமதாஸ்
தமிழக மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
வங்கக்கடலில் மீன் பிடிக்கச் சென்ற 17 தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படை கொடூரமாகத் தாக்கி கைது செய்துள்ளது. இந்த சம்பவத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், அவர் வெளியிட்ட அறிக்கையில், "சிங்களக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. இந்த அத்துமீறலுக்கு தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.
Tags :