ஒரு மாத ஊதியத்தை வழங்கிய முதலமைச்சர்
மிக்ஜாம் புயலால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்டங்கள் பெரும் பாதிப்படைந்தது. சென்னையின் புறநகர் பகுதி இன்னும் இயல்புநிலைக்கு வரவில்லை. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. பலர் முதலமைச்சரின் பொது நிவாரணத்துக்கு, நிவாரணம் வழங்கி வருகின்றனர். இந்தநிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தனது ஒருமாத சம்பளத்தை ( ரூ.2.20 லட்சம்) பொது நிவாரண நிதிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளார். இதேபோல் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் வழங்க முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். ஏற்கனவே ஐபிஎஸ் அதிகாரிகள், ஆசியர்கள் சங்கங்கள் ஒரு நாள் ஊதியத்தை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
Tags :