புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு
அரபிக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .வளிமண்டல சுழற்சி காரணமாக தென்கிழக்கு அரபிக் கடல் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது .இதன் காரணமாக கேரளாவில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தென் தமிழகத்தில் ஒரு இடங்களில் கன மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
Tags :