நெல்லையில் விடிய விடிய கனமழை மாணவர்கள்,மக்கள் அவதி.

by Editor / 09-12-2023 08:17:01am
நெல்லையில் விடிய விடிய கனமழை மாணவர்கள்,மக்கள் அவதி.

திருநெல்வேலி மாவட்டம் வண்ணார்பேட்டை பாளையங்கோட்டை நெல்லை சந்திப்பு மேலப்பாளையம் தச்சநல்லூர் கேடிசி நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விடிய விடிய இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.பல இடங்களில் மின்சாரம் தடைபட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர்ந்து 5 மணி நேரத்திற்கு மேலாக பெய்து வரும் கன மழையின் காரணமாக சாலையில் பல்வேறு இடங்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

வண்ணாரப்பேட்டை மேம்பால அருகே தண்ணீர் குளம் போல் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் பெருமளவு அவதியடைந்துள்ளனர்.மேலும் மகாராஜா நகர் பகுதியில் மரம் விழுந்து சிறிய அளவு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம் பகுதியில் தண்ணீர் தேங்கி உள்ளதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.பள்ளி விடுமுறை அறிவிப்பு முறையாக மாணவர்களுக்கு சென்றடையாத காரணத்தால் பல மாணவர்கள் பேருந்து நிலையத்திற்கு மழையில் நனைந்தபடி வந்தனர்

 

Tags : நெல்லையில் விடிய விடிய கனமழை மாணவர்கள்,மக்கள் அவதி.

Share via