கறிக் குழம்புக்காக தந்தையை கத்தியால் குத்திய மகன்
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் நாச்சியார் கோவிலை சேர்ந்தவர் மனோகரன் (60), மகன் ராமச்சந்திரன் (20). நேற்று இவர்கள் வீட்டில் கறி குழம்பு வைக்கப்பட்டுள்ளது. மகன் ராமச்சந்திரனுக்கு வைக்கப்பட்டிருந்த கறிக் குழம்பை தந்தை மனோகரன் சாப்பிட்டதால், ஆத்திரமடைந்து தந்தையிடம் தகராறு செய்துள்ளார். அப்போது அருகில் இருந்த கத்தியால் தந்தையை குத்தியதில் கத்தி உடைந்து தந்தை மனோகரனின் முதுகிலேயே சிக்கிக்கொண்டது. அக்கம் பக்கத்தினர் மனோகரனை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக மனோகரன் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். கத்தியால் குத்திய மகன் தலைமறைவாகிவிட்டார்
Tags :