கொடநாடு வழக்கில் எடப்பாடி ஆஜராக வேண்டும்

by Staff / 15-12-2023 02:32:34pm
கொடநாடு வழக்கில் எடப்பாடி ஆஜராக வேண்டும்

பாதுகாப்பு காரணங்களுக்காக, கொடநாடு வழக்கில், நேரில் ஆஜராகுவதில் இருந்து விலக்குக்கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சாட்சியங்களை பதிவு செய்வதற்காக மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராக எடப்பாடி பழனிசாமிக்கு அறிவுறுத்த வேண்டும், என எடப்பாடி தரப்பு வழக்கறிஞர்களுக்கு உத்தரவிட்டனர். மேலும், சாட்சியம் அளிக்க நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி எடப்பாடி பழனிசாமி கூறும் காரணங்கள் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. சென்னை உயர்நீதிமன்றம் சிறப்பான பாதுகாப்புகளை வழங்கி வருவகிறது என்று கூறி விலக்களிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via