சிறுநீரகத்தில் இருந்த 300 கற்கள் - அதிர்ச்சி
தைவானில் சியோ யு (20) என்ற பெண் கடுமையான வயிற்று வலியினால் மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் ஸ்கேன் செய்து பார்த்ததில் அவருக்கு சிறுநீரக கற்கள் இருப்பது கன்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் பெண்ணின் சிறுநீரகத்தில் இருந்து, சுமார் 300க்கும் மேற்பட்ட கற்களை அறுவை சிகிச்சையின் மூலம் மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். சியோவுக்கு தண்ணீர் குடிக்க பிடிக்காததால், அதற்கு பதிலாக Bubble tea மட்டுமே குடித்து வந்ததே சிறுநீரகத்தில் கற்கள் உருவாக காரணம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேலும் அறுவை சிகிச்சைக்கு பின், அவர் நலமுடன் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
Tags :