சிபிசிஎல் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து
சென்னை அருகே உள்ள மணலியில் உள்ள சிபிசிஎல் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த தீ விபத்தால் வெளியேறிவரும் கரும்புகையால் அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்தது போல் காட்சியாகிறது. மிக்ஜாம் புயலின்போது இந்த நிறுவனத்தில் இருந்து கொசஸ்தலை ஆற்றில் கச்சா எண்ணெய் கலந்த பரபரப்பு அடங்குவதற்கு இந்த தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கச்சா எண்ணெய் கசிவால்தான் தீ விபத்து நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tags :