மரக்கட்டை கிடங்கில் பயங்கர தீ விபத்து
உத்தர பிரதேச மாநிலம், சஹாரன்பூர் பகுதியில் உள்ள மில் ஒன்றிற்கு சொந்தமான மரக்கட்டை கிடங்களில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ வேகமாக பரவியதால், மரக்கட்டைகள் முற்றிலும் எரிந்த சாம்பலானது. தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் பல மணி நேரம் போராடி தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தீவிபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலானது.
Tags :