சிக்கிய ரயில் பயணிகள் மீட்கும் பணி தொடங்கியது

by Staff / 19-12-2023 11:05:42am
சிக்கிய ரயில் பயணிகள் மீட்கும் பணி தொடங்கியது

தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. திருநெல்வேலி, தூத்துத்துகுடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களில் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. 7,434 பேர் 84 நிவாரண மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். வெள்ளம் காரணமாக தூத்துக்குடி மாவட்டம், ஶ்ரீவைகுண்டம் அருகே நிறுத்தப்பட்டுள்ள ரயிலில் சிக்கியுள்ள 500க்கும் மேற்பட்ட பயணிகளை ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் பணி தொடங்கியுள்ளது. தூத்துக்குடி விமான நிலையத்தில் 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வெள்ளம் பாதித்த பகுதிகளில் அதிகாரிகள் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via