இந்தியாவில் தினமும் 30 விவசாயிகள் தற்கொலை

by Staff / 19-12-2023 11:24:38am
இந்தியாவில் தினமும் 30 விவசாயிகள் தற்கொலை

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) அறிக்கையின்படி, பாஜக ஆட்சியில் நாட்டில் தினமும் சராசரியாக 30 விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் வெளியான இந்த அறிக்கையின்படி, 2014-22ம் ஆண்டுக்குள் 1,00,474 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். மகாராஷ்டிராவில் 2,640 விவசாயிகளும், கர்நாடகாவில் 1,170 விவசாயிகளும், ஆந்திராவில் 481 விவசாயிகளும் தற்கொலை செய்துள்ளனர். கடன் தொல்லை, விளைவித்த பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகியது உள்ளிட்ட காரணங்களால் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதாக கூறப்படுகிறது.

 

Tags :

Share via