மனைவியின் கன்னத்தை கடித்த கணவர் கைது

by Staff / 20-12-2023 03:36:54pm
மனைவியின் கன்னத்தை கடித்த கணவர் கைது

கர்நாடக மாநிலம், தட்சிண கன்னடா அருகே உள்ள பெல்தங்கடி பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் கவுடா [55]. இவரது மனைவி மோகினி (54). இந்த தம்பதிக்கு 22 வயதில் மகள் உள்ளார். கூலி வேலை செய்து வரும் சுரேஷ் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லவில்லை. சம்பவத்தன்று வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு வந்துள்ளார். அப்போது நடந்த சண்டையில் மனைவியின் கன்னத்தை கடித்து காயப்படுத்தியுள்ளார். தடுக்க வந்த மகளையும் அடித்துவிட்டு தப்பியோடியுள்ளார். அக்கம்பக்கத்தினர் மோகினியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் தப்பியோடிய சுரேஷை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories