உயர்நீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளது முதல் விக்கெட் விழுந்துள்ளது - ஜெயக்குமார்

by Staff / 21-12-2023 12:31:20pm
உயர்நீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளது முதல் விக்கெட் விழுந்துள்ளது - ஜெயக்குமார்

பொன்முடி, அவரது மனைவிக்கு சென்னை உயர் நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. இது குறித்து தனியார் செய்திக்கு பேட்டியளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சென்னை உயர்நீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளது. ஒரு விக்கெட் தற்போது விழுந்துள்ளது. மேலும் சில விக்கெட்டுகள் விழும். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது உள்ள வழக்குகளை எதிர்கொள்ள தயாராக உள்ளோம். திமுக ஆட்சி ஊழலுக்காகவே கலைக்கப்பட்டது. எந்த கட்சியாக இருந்தாலும் குற்றம் செய்தவர் சிறை செல்ல வேண்டும் என்றார்.

 

Tags :

Share via