மாணவ-மாணவிகள் கொடுத்த நிவாரணத்தொகையை வாங்க மறுத்த  நகைச்சுவை நடிகர் பாலா பேட்டி.

by Editor / 23-12-2023 10:03:46am
மாணவ-மாணவிகள் கொடுத்த நிவாரணத்தொகையை வாங்க மறுத்த  நகைச்சுவை நடிகர் பாலா பேட்டி.

தன்னிடம் இருந்த தொகை, சென்னை வெள்ள நிவாரணத்திற்கு செலவு செய்து விட்டதால், தென் மாவட்டத்திற்கு வெறும் கையோடு செல்லாமல் அதற்கான தொகையை தயார் செய்து விரைவில் செல்ல உள்ளதாக நகைச்சுவை நடிகர் பாலா பேட்டி-.

தென்காசி மாவட்டம் இலஞ்சியிலுள்ள, பாரத் மெட்ரிக்குலேசன் பள்ளி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நகைச்சுவை நடிகர் பாலா வருகை தந்தார்.. நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் பாலா செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தன்னிடம் சேமிப்பு தொகையாக இருந்த 5 லட்ச ரூபாயை  சென்னை வெள்ள நிவாரணத்திற்கு மக்களுக்காக கொடுத்து விட்டேன். தற்போது தென் மாவட்டங்களிலும்  பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.. வெள்ள பாதிப்பு காரணமாக மக்கள், ஒவ்வொரு தேவைகளில் உள்ளனர். எனவே, வெறும் கையோடு செல்ல விரும்பவில்லை எனவும் எதையாவது கொண்டு செல்ல உள்ளதாகவும் கூறினார்.

 தன்னை ஊக்கப்படுத்தும் விதமாக மேடைகளில் பேசி வரும் சீமான் மற்றும் அன்புமணி அவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்து கொள்வதாகவும் கூறினார்.
நிகழ்ச்சியில், முன்னதாக பள்ளி மாணவ- மாணவிகள் தாங்கள் திரட்டிய நிவாரணத் தொகையை பாலாவிடம் கொடுத்த நிலையில்,  தனது பணத்தில் இருந்து உதவுவே விரும்புவதாகவும் இந்த பணத்தை நீங்களே ( மாணவ,மாணவிகளே) நேரடியாக மக்களுக்கு கொடுங்கள் எனவும் தெரிவித்தது அனைவரின் பாராட்டைப் பெற்றது..

இந்தநிகழ்வில், பள்ளி தாளாளர் மோகனகிருஷ்ணன்,முதல்வர் .காந்திமதி மோகனகிருஷ்ணன்,ஆசிரியைகள் கலந்துகொண்டனர்.

மாணவ-மாணவிகள் கொடுத்த நிவாரணத்தொகையை வாங்க மறுத்த  நகைச்சுவை நடிகர் பாலா பேட்டி.
 

Tags : மாணவ,மாணவிகள் கொடுத்த நிவாரணத்தொகையை வாங்கமறுத்த  நகைச்சுவை நடிகர் பாலா பேட்டி.

Share via