தலைமைச்செயலக ஊழியர்கள்  2ந்தேதி 1மணியுடன் பணிமுடிக்க உத்தரவு

by Editor / 31-07-2021 12:16:58pm
தலைமைச்செயலக ஊழியர்கள்  2ந்தேதி 1மணியுடன் பணிமுடிக்க உத்தரவு



தமிழக சட்டப்பேரவை நூற்றாண்டு விழா மற்றும் கருணாநிதி படம் திறப்பு விழா ஆகஸ்டு 2ந்தேதி மாலை 5 மணிக்கு சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் நடைபெற உள்ளன. 


 நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சென்னை வருகிறார். இதையொட்டி, தலைமைச் செயலக ஊழியர்கள் பகல் 1 மணிக்கு பணி முடித்து வீட்டுக்குசெல்லுமாறு தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டு உள்ளார்.


இந்த விழாவில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டு நூற்றாண்டு விழா மற்றும் கருணாநிதி படம் திறப்பு விழாவை தொடங்கி வைக்கிறார். நிகழ்ச்சியில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட முக்கிய தலைவர்கள் கலந்துகொள்கின்றனர்.

 

Tags :

Share via