இறுதிச்சடங்கில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் இறுதிச்சடங்கில் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது என்று போலீஸ் தரப்பில் இருந்து சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது.
2.30 மணிக்கு தீவுத்திடலில் இருந்து தேமுதிக அலுவலகத்திற்கு ஊர்வலமாக செல்லும் கேப்டனின் உடல், மாலை 4.45 மணிக்கு மேல் அடக்கம் செய்யப்படவுள்ளது.
கூட்டநெரிசலை தவிர்க்கும் பொருட்டு குடும்ப உறுப்பினர்கள் உள்பட 200 பேருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் இறுதிச்சடங்கைகாண எல்.இ.டி.திரையில்காட்சி ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசு மரியாதையுடன் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
Tags :