குழந்தையை தண்ணீரில் போட்டு கொன்ற தந்தை
கரையப்பட்டியை சேர்ந்த மோகன் என்பவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியை விவாகரத்து செய்யாத நிலையில், செண்பகவள்ளி என்ற கிருத்திகாவுடன் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார். இதனையடுத்து அவர்களுக்கு கடந்த 37 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன் தினம் (12ஆம் தேதி) மாலை அவர்களது வீட்டு மாடியில் உள்ள சின்டெக்ஸில் குழந்தை சடலமாக கிடந்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்த நடந்த விசாரணையில் முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலே மற்றொரு பெண்ணுடன் சேர்ந்து குழந்தை பிறந்ததால் இவ்வாறு செய்ததாக மோகன் கூறியுள்ளார். இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.
Tags :