கிணற்றில் வாலிபர் பிணம்

by Staff / 19-01-2024 01:34:56pm
கிணற்றில் வாலிபர் பிணம்

சேலம் சூரமங்கலம் ஆண்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 26). கட்டிட தொழிலாளி. சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் அதே பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் சக்திவேல் பிணமாக மிதந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சூரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபரின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via