மகாராஷ்டிராவில் கோர விபத்து : 6 பேர் பலி

by Staff / 24-01-2024 01:12:16pm
மகாராஷ்டிராவில் கோர விபத்து : 6 பேர் பலி

மகாராஷ்டிரா மாநிலம் அகமது நகரில் அரசுப் பேருந்து, லாரி மற்றும் கார் மீது மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர். கரும்பு ஏற்றிச் சென்ற டிராக்டர் ஒன்று கவிழ்ந்ததால் , அவற்றை மற்றொரு டிராக்டரில் தொழிலாளர்கள் ஏற்றிக் கொண்டிருந்தனர். அச்சமயம் அங்கு வந்த கார் ஓட்டுனர், வண்டியை நிறுத்திவிட்டு அவர்களுக்கு உதவியுள்ளார். அப்போது அங்கு வந்த அரசுப்பேருந்து லாரி மற்றும் கார் மீது மோதியதில் தொழிலாளர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via