மசூதிக்கு உள்ளே வழிபாடு: தடை விதிக்க மறுப்பு

by Staff / 02-02-2024 03:53:47pm
மசூதிக்கு உள்ளே வழிபாடு: தடை விதிக்க மறுப்பு

ஞானபாபி மசூதிக்கு உள்ளே இந்து அமைப்பினர் வழிபாடு நடத்த அனுமதி வழங்கியதற்கு தடை விதிக்க அலகாபாத் உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மனுவை திருத்தி தாக்கல் செய்ய மசூதி கமிட்டிக்கு உத்தரவிட்டு பிப்ரவரி 6 ஆம் தேதிக்கு நீதிபதி ரோகித் ரஞ்சன் அகர்வால் வழக்கை ஒத்திவைத்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தீர்ப்பு வந்த உடனே ஆலயத்திற்கு நுழைந்து இந்து அமைப்பினர் வழிபாடு நடத்தியது குறிப்பிடத்தக்கது.
 

 

Tags :

Share via