தமிழகத்தில் ஐ..ஏ.ஏஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
நாகர்கோவில் மாநகராட்சி கமிஷனராக நிஷாந்த் கிருஷ்ணாவும், திருச்சி மாநகராட்சி கமிஷனராக வி.சரவணனையும் நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:மாநில மனித உரிமைகள் ஆணைய செயலாளராக ஏ.சுகந்தி நியமனம்.மதுவிலக்கு மற்றும் உள்துறை இணை செயலாளராக எஸ்.பி. அம்ரித் நியமனம்.வணிக வரித்துறை இணை கமிஷனராக ரத்தினசாமி நியமனம்.குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய இணட மேலாண் இயக்குநராக ஆனந்த் மோகன் நியமனம்.சென்னை பெருநகர மாநாகராட்சி கூடுதல் கமிஷனராக வி.ஜெயச்சந்திர பானு ரெட்டி நியமனம்.ராமநாதபுரம் மாவட்ட கூடுதல் ஆட்சியர் மற்றும் திட்ட அதிகாரியாக வீர்பிரதாப் சிங் நியமனம்.நாகர்கோவில் மாநகராட்சி கமிஷனராக நிஷாந்த் கிருஷ்ணா நியமனம்.திருச்சி மாநகராட்சி கமிஷனராக வி.சரவணன் நியமனம்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Tags : தமிழகத்தில் ஐ..ஏ.ஏஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.