தென்காசியில் கள்ளநோட்டுக்களோடு 2 பேரும் ,சரக்கு பதுக்கிய1 நபரும் என 3 பேர் கைது.

by Editor / 10-10-2022 12:23:47am
தென்காசியில் கள்ளநோட்டுக்களோடு 2 பேரும் ,சரக்கு பதுக்கிய1 நபரும் என 3 பேர் கைது.

தென்காசி மாவட்டத்தில் சட்ட விரோத செயல்களை செய்யும் கும்பல்கள் குறித்து காவல்துறையினர் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் இதன் தொடர்ச்சியாக தென்காசி மாவட்டம் குற்றாலம் காவல் நிலையத்தின் எல்லைக்குட்பட்ட சிவகாமி புரம் பகுதியை சேர்ந்த முத்துக்குமார் என்பவர் கண்டமங்கலம்  பகுதியில் சட்ட விரோதமாக மதுப்பாட்டில் விற்பனை செய்து கொண்டிருந்த போது அவரிடமிருந்து 350 குவார்ட்டர் பாட்டில்களை  பறிமுதல் செய்து அவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

செங்கோட்டை பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த இரண்டு நபர்களை பிடித்து தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் தெற்கு மேடு ஆர்.சி.தெருவைச் சேர்ந்த சேது என்ற வடிவேல் மகன் பிரகலாதன் என்பவரும் விஸ்வநாதபுரம் புதுமனை தெருவைச் சேர்ந்த முருகேசன் என்பவர் மகன் மாரிமுத்து ஆகிய இரண்டு நபர்களும் ரூபாய் 2.25 லட்சம் மதிப்பீட்டில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விடுவதற்காக கொண்டு வந்தது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரண்டு நபர்களையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து தென்காசி மாவட்டத்தில் சட்டவிரோத செயல்கள் செய்யும் கும்பல்கள் குறித்து காவல்துறையினர் தீவிரமான கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via