வங்கி அதிகாரிகள் டார்ச்சர்- கணவன் மனைவி தற்கொலை

by Staff / 18-02-2024 04:46:25pm
வங்கி அதிகாரிகள் டார்ச்சர்- கணவன் மனைவி தற்கொலை

தெலங்கானா மாநிலத்தில் தம்பதியினரை வங்கி கடன் வசூலிக்கும் ஏஜென்சியினர் அடிக்கடி வீட்டுக்கு வந்து கிரெடிட் கார்ட் பில்தொகையை செலுத்தும்படி டார்ச்சர் செய்ததாக கூறப்படுகிறது.மேலும் அக்கம் பக்கத்தினர் முன்னிலையில் அவமானப்படுத்தியுள்ளனர்.இதனால் மன உளைச்சலில் இருந்த தம்பதி கணவன், மனைவி இருவரும் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்துகொண்டனர். தங்கள் இறப்புக்கு வங்கி கிரெடிட் கார்டு அதிகாரிகளே காரணம் என கடிதம் எழுதி வைத்துள்ளனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via