அமலாக்கத்துறை வழக்கில் செந்தில் பாலாஜி மனு இன்று விசாரணை.

by Editor / 20-02-2024 09:01:17am
அமலாக்கத்துறை வழக்கில் செந்தில் பாலாஜி மனு இன்று விசாரணை.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மனு இன்று விசாரணைக்கு வருகிறது. அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு வருகிறது. விடுவிக்கக்கோரிய மனு மீது உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை குற்றச்சாட்டுகள் பதிவை தள்ளி வைக்க மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்தாண்டு ஜுன் 14ஆம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது நீதிமன்ற காவலும் இன்றுடன் நிறைவடைய உள்ளதால், 22வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

 

Tags : அமலாக்கத்துறை வழக்கில் செந்தில் பாலாஜி மனு இன்று விசாரணை.

Share via