பாலஸ்தீனியர்கள் மீது துப்பாக்கி சூடு - 112 பேர் பலி

by Staff / 01-03-2024 02:03:42pm
பாலஸ்தீனியர்கள் மீது துப்பாக்கி சூடு - 112 பேர் பலி

காசாவில் உதவிக்காக வந்த பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேலியப் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குறைந்தது 112 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 760 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். எனினும், பொதுமக்களை எச்சரிப்பதற்காகவே இந்த எச்சரிக்கை குண்டுகள் வீசப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. ஆனால் சில பாலஸ்தீனியர்கள் இராணுவம் நேரடியாக கூட்டத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக குற்றம் சாட்டுகின்றனர். பாலஸ்தீனர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பின்னர் இஸ்ரேலியப் படைகள் முன்னோக்கி நகர்ந்ததில் மேலும் பலர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

Tags :

Share via