போதைப் பொருளுக்கு எதிராக செயல்படுங்கள்_ ஆளுநர் ஆர் .என்.ரவி

by Admin / 11-03-2024 10:24:25am
போதைப் பொருளுக்கு எதிராக செயல்படுங்கள்_ ஆளுநர் ஆர் .என்.ரவி

 

சமீபத்தில் கணிசமான அளவில் போதைப் பொருள்கள் மற்றும் மனோவியல் பொருள்களின் பறிமுதல் நடவடிக்கைகள் மற்றும் அது தொடர்பாக தமிழ் நாட்டிலும் மற்ற இடங்களிலும் சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் மத்திய அமைப்புகளால் கைது செய்யப்பட்டுள்ளது. நமது மாநிலத்தில் போதை பொருள்கள் புழக்கத்தில் உள்ளதாக நிலவிய நமது மோசமான அச்சங்களை உறுதிப்படுத்தி உள்ளது. உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் தங்களின் பிள்ளைகளின் நிலை குறித்து கவலைப்படும் பெற்றோர்கள் கடந்த ஓராண்டாக மாநிலத்தில் உள்ள கல்வி வளாகங்கள் பொழுதுபோக்கு மன்றங்கள் போன்றவற்றில் போதை பொருட்கள் புழக்கத்தில் இருப்பது குறித்த தங்களுடைய தீவிர கவலையை கடந்த ஓராண்டுக்கும் மேலாக என்னிடம் பகிர்ந்து வந்தனர்.

மத்திய உளவுத்துறை புலனாய்வு மற்றும் சட்ட அமலாக்க அமைப்புகள் சர்வதேச கடத்தல் கும்பலை பிடிக்கும் நடவடிக்கையில் நமது மாநிலத்தில் சட்டவிரவு அப்போதை பொருள்கள் கடத்தலில் முக்கிய மூளையாக ஈடுபட்டு வந்தவர்களை கண்டறிந்துள்ளன. இந்த போதைப் பொருள்கள் மிகவும் அடிமையாக்கும் தன்மையையும் அலுவை ஏற்படுத்தவும் கூடியது. .இதை பரிசோதிக்காமல் விட்டால் விரைவில் அது நமது எதிர்கால தலைமுறையையே அழித்துவிடும் போதைப் பொருளுக்கு அடிமையாவது பல கொடூரமான குற்றங்களுக்கும் வலியுறுக்கிறது துல்லிய அவசர நடவடிக்கை உணர்வுடனும் மிகுந்த முன்னுரிமையுடனும் இந்த அச்சுறுத்தலை கையாள வேண்டும் மத்திய மற்றும் மாநில சட்ட அமலாக்க அமைப்புகள் தங்கள் பணிகளை செய்யும். அதே வேளையில் நம் மாநிலத்தில் உள்ள பெற்றோர் மற்றும் கல்வி நிறுவன நிர்வாகங்கள் இதுபோன்ற போதைப் பொருளுக்கு எதிராக எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும். போதைப் பொருள் கடத்தல் காரர்களின் முதன்மை இலக்கு இளைஞர்கள் என்பதால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் இதுபோன்ற துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகும் அறிகுறிகளை கொண்டிருக்கிறார்களா என்பதை கண்டறிய கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும்.

இந்த நேரத்தில் இளைஞர்களுக்கு எனது வேண்டுகோள் இதுதான் .தயவு செய்து இது போன்ற சலனங்களில் இருந்து விலகி இருங்கள்.ஏனெனில் ,இது உங்கள் வாழ்வையும் குடும்பத்தையும் சரிப்படுத்த முடியாத அளவுக்கு அழித்துவிடும். இத்தகைய போதை பொருள்கள் தங்களுடைய வளாகத்திலோ அருகாமையிலோ நுழையாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதில் கல்வி நிறுவனங்களின் நிர்வாகங்களுக்கு சிறப்பு பொறுப்பு உள்ளது நமது மக்களின் அழகுக்காகவும் மாநிலத்தின் எதிர்காலத்திற்காகவும் போதை பொருள் அச்சுறுத்தலுக்கு எதிராக அனைவரும் முழு ஒத்துழைப்புடன் நல்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன் என்று ஆளுநர் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளார்..

 

Tags :

Share via