நான்கு தேர்தல்களில் தொடர்ந்த வெற்றிக் கூட்டணி ஐந்தாவது தேர்தலிலும் வெற்றி பெறக் களம் காண்கிறது.

by Admin / 11-03-2024 10:18:45am
நான்கு தேர்தல்களில் தொடர்ந்த வெற்றிக் கூட்டணி ஐந்தாவது தேர்தலிலும் வெற்றி பெறக் களம் காண்கிறது.

நான்கு தேர்தல்களில் தொடர்ந்த வெற்றிக் கூட்டணி ஐந்தாவது தேர்தலிலும் வெற்றி பெறக் களம் காண்கிறது... நாற்பது தொகுதிகளிலும் மு..க..ஸ்டாலின் தான் வேட்பாளர் என்ற உணர்வோடு கழக உடன்பிறப்புகள் பணியாற்றிட அன்போடு கேட்டுக் கொள்கிறேன்...

ஒன்றிய அரசில் மக்களாட்சி மாண்பை காக்கும் மகத்தான புதிய அரசை ஆட்சியில் அமர்த்துவதற்காக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கின்றது பாஜகவை வீழ்த்துவது என்பது மட்டுமல்ல அதன் பிறகு கூட்டாட்சி அரசாக அமைய வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்தியா கூட்டணி அமைக்கப்பட்டது. தங்களை எதிர்ப்பதற்கு யாரும் இல்லை என்ற அமைதியுடன் இருந்த பாஜக தலைமை அதன் பிறகு இந்தியா என்ற சொல்லையே சொல்லாமல் தவிர்த்தது .இந்தியா கூட்டணி கட்சிகளை தன்னுடைய அதிகார அமைப்புகளின் மூலமாக வேட்டையாடிய பா.ஜ.கவின் சர்வதிகார நடவடிக்கைகள் தான் இந்த கூட்டணியின் வலிமையை நாட்டுக்கு உணர்த்தியது..

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு நேற்றைய தினத்துடன் மிகச் சிறப்பாக முடிவற்றது என்பதை மனமகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன் .எண்ணிக்கை அல்ல எண்ணம் தான் முக்கியம் என்பதை உணர்ந்தவர்கள் நம் கூட்டணி கட்சித் தலைவர்கள் பாசிச பா.ஜ.கவை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கம் மட்டுமே கொண்ட இந்த ஒற்றுமை உணர்வு தான் 2019 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் அனைத்து வெற்றிகளுக்கும் காரணமாக அமைந்துள்ளது..

ஆட்சி முடிய போகும் நிலையில் மாநில மாநிலமாக சென்று திட்டங்களை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடியின் பதற்றம் அவர் முகத்தில் இருக்கும் பயத்தை காட்டுகிறது. வேண்டாம் மோடி என்ற முழக்கமே இந்தியா முழுமைக்கும் எதிரொலிக்கிறது. பா.ஜ.கவை வீழ்த்தி ஆக வேண்டும் என்ற அரசியல் நோக்கம் இந்தியா கூட்டணி கட்சிகளால் மக்கள் மனதில் விதைக்கப்பட்டு விட்டது .ராஜாவுக்கு எதிரான வாக்குகள் சிதறி விடக்கூடாது என்ற நோக்கத்துடன் கூட்டணி கட்சி தலைவர்கள் பல்வேறு மாநிலங்களில் கூட்டணி பேச்சுவார்த்தையில் நடத்தி வருகிறார்கள். புதுவை உள்ளிட்ட தமிழ்நாட்டில் 40 தொகுதிகளிலும் வேட்பாளர் மு .க .ஸ்டாலின் என்பதை மனதில் வைத்து அனைவரும் பணியாற்ற வேண்டும்.. மாநிலங்களை மதிக்கும் ஒன்றிய அரசை அமைக்க திமுக தலைமையிலான கூட்டணி 40க்கு 40 வென்றாக வேண்டும். வெற்றி ஒன்றே உங்களது நோக்கமாக இருக்கட்டும்.. பத்தாண்டு கால பா.ஜ.க ஆட்சி இந்தியாவை பாழ்படுத்தியதை மூன்று ஆண்டு கால திராவிட மாநாடு ஆட்சியால் தமிழ்நாடு அடைந்துள்ள ஏற்றத்தை மக்களுக்கு நினைவூட்டுங்கள் இந்தியா முழுமைக்குமான கூட்டாட்சி அமைய வேண்டிய அரசியல் தேவை உணர்த்துங்கள். .நாப்பதும் நமதே நாடும் நமதே என்று முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via