தனியார் மருத்துவமனையில் ராஜாத்தி அம்மாள் அனுமதி.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மனைவி ராஜாத்தி அம்மாள் ,சென்னை சி.ஐ.டி. காலனியில் உள்ள மகள் கனிமொழியுடன் வசித்துவருகிறார். இந்நிலையில், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக ,சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ராஜாத்தி அம்மாள் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பபட்டுள்ளது என்றும் . உரிய சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.என்றும் உடல்நிலை சீரானதும் விரைவில் அவர் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனையினர் தெரிவித்துள்ளனர்.
Tags : தனியார் மருத்துவமனையில் ராஜாத்தி அம்மாள் அனுமதி