நள்ளிரவு நேரத்தில் திடீர் விசிட்... திக்குமுக்காடிய ஊழியர்கள்... அமைச்சர் செந்தில் பாலாஜி திடீர் ஆய்வு...

by Admin / 05-08-2021 01:37:12pm
நள்ளிரவு நேரத்தில் திடீர் விசிட்... திக்குமுக்காடிய ஊழியர்கள்... அமைச்சர் செந்தில் பாலாஜி திடீர் ஆய்வு...



சென்னையில் நள்ளிரவு நேரத்தில் மின்சார அலுவலகங்களில் திடீரென ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, அங்கு குடிபோதையில் பணியில் இருந்த ஊழியரை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் அவ்வப்போது மின் இணைப்பு துண்டிக்கப்படுவது குறித்து புகார்கள் வந்ததன் அடிப்படையில், சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் நள்ளிரவு நேரத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

கட்டுபாடு அறைக்கு சென்ற அமைச்சர், அங்கு நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்துள்ளார். அப்போது, பொதுமக்களிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வர, அதனை உடனடியாக எடுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி, புகார் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளிடம் கூறினார்.

இதனையடுத்து, வட சென்னை பகுதிக்கு உட்பட்ட கொருக்குபேட்டை துணை மின் அலுவலகத்திற்கு அமைச்சர் சென்றுள்ளார்.

 அவரது வருகையை சற்றும் எதிர்பாராத ஊழியர்கள் திக்குமுக்காடி போயினர். இதனிடையே, மதுபோதையில் பணியிலிருந்த ஜெகன் என்ற ஊழியரை பணியிடை நீக்கம் செய்ய, அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவிட்டார்.

 

Tags :

Share via